Tuesday 21 August 2012

தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமா?


தற்போது அரசியல் அரங்கில் ஒரு பரபரப்பான செய்தி என்னவென்றால், அது, தமிழகத்தில் கூடிய விரைவில் டாஸ்மாக் கடைகள் எல்லாம் மூடப்பட இருக்கின்றன என்பதுதான். இது வரும் பாராளுமன்ற தேர்தல் கணக்கு என்று அரசியல் ரீதியில் கருத்து கூறினாலும், மதுவிலக்கு என்பது நடைமுறையில் சாத்தியம்தானா? இதனால் ஏற்படும் நன்மை,தீமைகள் என்ன/
மதுவிலக்கு அமல்படுத்தினால், அரசுக்கு ஏற்படும் ஒரே பாதிப்பு வருமானம் ஒன்றுதான். ஆனால், நன்மைகள் பல.  இன்றைக்கு மது குடிப்பது என்பது ஒரு தீய பழக்கம் என்ற எண்ணமே மக்கள் மனதில் இல்லை. டிபன் சாப்பிடுவது, டீ,காபி குடிப்பது போல், மது அருந்துவது என்பது ஒரு அன்றாட தேவை என்பது போல் நிலைமை மாறிவிட்டது. முன்பெல்லாம் பிறந்தநாள்,  திருமணம், இறந்தவீடு என்று ஏதாவது ஒரு நன்மை அல்லது தீமை நிகழ்ச்சிகளுக்கு மட்டும் மது விருந்து வைப்பது என்பது ஒரு பழக்கமாக இருந்தது. ஆனால் இப்போது மது அருந்துவது என்பது ஒரு அன்றாட நிகழ்ச்சியாக மாறிவிட்டது. பள்ளி மாணவர்கள் முதல், ரிட்டையர்டு ஆசாமி வரை குடிப்பழக்கம் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. இன்னும் ஒரு படி மேலே போனால், பெண்களும் அதுவும் இளம்பெண்களும் இந்த பழக்கத்திற்கு படிப்படியாக அடிமையாக வருகின்றனர். இந்த நிலைமை இப்படியே போனால், நமது கலாச்சாரம் என்பது கிலோ என்ன விலை என்ற நிலைமைக்கு வந்துவிடும்.
குடித்துவிட்டு கலாட்டா செய்தால் தண்டனை, குடித்துவிட்டு வண்டி ஓட்டினால் தண்டனை என்ற சட்டம் உண்மையில் நகைப்புக்குரிய ஒரு சட்டம். வண்டியில் டாஸ்மாக் கடைக்கு வரும் குடிகாரன், குடித்துவிட்டு, வண்டியை அங்கேயே விட்டுவிட்டு ஆட்டோவிலா செல்ல முடியும்,. தெருவிற்கு நான்கு மதுக்கடைகளை திறந்துவிட்டு, பின் குடிக்காதே என்று பாட்டிலின் மேல் லேபிள் மட்டும் ஒட்டுவதால், என்ன பயன் விளையும் என்று அரசு நினைக்கின்றது என்றே தெரியவில்லை. சினிமாவிலும், டிவி சீரியல்களிலும், மது குடிக்கின்ற காட்சிகள் வரும்பொழுது, மது தீமையானது என்ற விளம்பரம் வருகிறது.  என்ன ஒரு பைத்தியக்காரத்தனமான விளம்பரம். குடிகாரன் அந்த விளம்பரத்தை பார்த்து திருந்துவது என்பது நடக்கக்கூடிய காரியமா?  இன்றைக்கு நடக்கும் 90 சதவிகித விபத்துகளுக்கு குடித்துவிட்டு, வாகங்களை இயக்குவதாலே ஏற்படுகிறது.
ஒரு குற்றம் தடுக்கப்படவேண்டுமென்றால், அந்த குற்றத்தின் ஆணிவேர் களையப்படவேண்டும். மதுவை ஒழிக்க வேண்டுமென்றால், கண்டிப்பாக மதுக்கடைகளை மூடினால்தான் முடியும். கள்ளச்சாராயம் பெருகும் என்ற வீண்வாதம் தேவையில்லாதது. குடித்தே ஆகவேண்டும் என்பவன் கள்ளச்சாராயமோ அல்லது வெளிமாநிலத்திற்கோ சென்று குடிப்பான்,. நாம் அவர்களை விட்டுவிடுவோம். ஆனால் கடைகள் திறந்திருப்பதால்தான் குடிக்கிறேன் என்று சொல்பவர்கள் கண்டிப்பாக திருந்துவார்கள். மேலும் குடிப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு செலவிடப்படும் மருத்துவச்செலவுகள் பெருமளவு அரசுக்கு குறையும். கண்டிப்பாக ஏழை, எளியவர்கள் வீட்டில் மூன்று வேளைகளும் அடுப்பு எரியும்.
இலவச திட்டங்களை நிறுத்தினாலே மதுக்கடை மூடலால் ஏற்படும் இழப்பை பெருமளவு சரிகட்டலாம். மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில், மத்திய அரசுக்கே சவால் விடும் அளவிற்கு பொருளாதாரம் இருப்பதை இன்றைய தமிழக அரசு சிந்திக்கவேண்டும்.  மதுக்கடைகளை மூடினால், பொதுமக்கள் பலர் பயமின்றி வாழ்க்கையை ஓட்டலாம். பணமும் மக்கள் கையில் தாராளமாக புழங்கும். மதுவிற்கு செலவிடப்பட்ட பணம், வேறு சில நல்ல வழிகளில் செலவழிக்க வாய்ப்புள்ளது. இதனால் கண்டிப்பாக தமிழகத்தில் பொருளாதார புரட்சி ஏற்படும் என்பது நிச்சயமே. 
உலகில் மதுவிலக்கு பல நாடுகளில், குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் அமலில் உள்ளது. ஆனால் மகாத்மா பிறந்த இந்தியாவில், அவரது தாய் மண்ணான குஜராத்தில் மட்டும் அமலில் உள்ளது. மதுவிலக்கை முதன்முதலில் மூதறிஞர் ராஜாஜி அமல்படுத்தியபோது, பொருளாதார வல்லுனர்கள், பெரும் நிதியிழப்பு ஏற்படும் என்று எச்சரித்தனர். ஆனால், ராஜாஜி அவர்களோ, சமூகச் சீர்கேட்டினைத் தடுத்து நிறுத்துவதற்காக ஒரு மாநிலத்தின் வருவாயைப் பாதித்தாலும் அதைச் சமாளிக்கப் புதிய யோசனைகளை நடைமுறைக்குக் கொண்டுவருவதுதான் சிறந்த நிர்வாகத் திறன் என்று கூறி மதுவிலக்கை தைரியமாக அமல்படுத்தினார். அந்த அளவிற்கு தைரியம் உள்ளவர் இப்போதைய முதல்வர் என்பதை  மதுவிலக்கை அமல் படுத்தி நிரூபிக்கவேண்டும்.  முதலில் சில சிறுசிறு இடர்பாடுகள் வரத்தான் செய்யும். ஆனால், நீண்டநாள் பயன்கருதி அவற்றையெல்லாம் அரசு சமாளிக்க வேண்டும். 
தற்கொலைக்கு முயல்வோரில் 37 சதவீதத்தினர் மதுப்பழக்கம் உள்ளவர்களே. மது போதையில் தவறுகள் செய்யத் துணிபவன், போதை குறைந்ததும் தான் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் கொலையும் செய்யத் துணிகிறான். மது தீமை தரும் என எழுதி மட்டும் வைப்பதால் பயனில்லை. வீட்டுக்கும், நாட்டுக்கும், உயிருக்கும் மது கேடு என்றால், அதற்குத் தடை விதிப்பதுதானே சரியாகும். அதை விட்டு எச்சரிக்கை செய்வது மட்டுமே எங்களது கடமை எனக் கூறுவதற்கு ஓர் அரசு தேவையில்லையே.. 
ஒரு ஆட்சியின் வரலாறு எழுதப்படும்போது, அந்த ஆட்சி எத்தனை ஆண்டுகள் பதவியில் இருந்தது என்பதை விட, பதவிகாலத்தில் அந்த அரசு மக்களுக்கு என்ன செய்தது என்பதை வைத்தே அந்த ஆட்சியின் முக்கியத்துவம் தெரியும். எனவே தமிழகத்தின் எதிர்கால, வளமான, திறமையான சமுதாயதிற்கு மதுவிலக்கு என்பது இன்றியமையாதது. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பது நல்லவையாக இருக்க மதுவை ஒழிப்போம், மறுமலர்ச்சியை வரவேற்போம்.

உற்சாகமாய் வாழ வேண்டுமா?


உடற்பயிற்சி என்பதை உச்சரிக்கும் பொழுதே உற்சாகம் தரக்கூடிய வார்த்தை. ஆனால் அந்த உற்சாகம் தொடர வேண்டுமெனில் அதன் பலன் நமக்கு முழுமையாக கிடைக்க வேண்டுமெனில் அதை நடைமுறைப் படுத்துவது உடற்பயிற்சியை செயல் படுத்துவது முக்கியம். ஆனால் அதை நம்மில் எத்தனைபேர் வழக்கமாய் கொண்டு உள்ளோம் என்ற கேள்விக்கான பதில் சொற்பம், ஏன் இப்படி?

எண்ணமே வாழ்க்கை என்ற ஞானிகளின் கூற்றும், நீ எதுவாக மாற வேண்டும் என்று விரும்புகிறாயோ அதுவாகவே மாறுகிறாய், உன் எண்ணம் உண்மையாக இருந்தால் என்ற தன்னம்பிக்கை வித்தகர் காப்மேயரின் வார்த்தைகளும் நிஜம் என்றால் நாளைக்கு காலையில் எழுந்தவுடன் மைதானத்திற்கு போகனும் என்ற வார்த்தை ஜாலங்களும், எனக்கு உடற்பயிற்சி செய்ய நேரமில்லை. நான் ரொம்ப பிஸி என அலட்சியம் காட்டும் இயலாத்தனமும் நான் காலையிலிருந்து ராத்திரி வரைக்கும் வேலை செய்கிறேன், மேலும் எதற்கு உடற்பயிற்சி என மருத்துவ உண்மையை ஏற்றுக் கொள்ளாத மனப்பாங்கும், தன்னுடைய உடலை சினிமா நடிகைகளைப் போல் ஆக்க வேண்டும் என்று இளம் பெண்கள் பட்டினி கிடந்து மெலிந்து கிடப்பதும், அதன் மூலம் உடலில் வரக்கூடிய பக்க விளைவுகளும் தொட்டதெற்கெல்லாம் மருந்துகளையும் மாத்திரைகளையும் நாடும் தாய்மார்களும் அதன் மூலம் குறையும் நோய் எதிர்ப்பு சக்தியும் நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் மேற்படி நபர்களின் சித்தாந்தங்கள்.
 


அவர்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு தருவதை விட பிரச்சனைகள் அதிகமாகவே ஆக்கும் என்பதை உங்களால் உணர முடியும். வெற்றி பெற்றவன் காரணத்தை தேடுவதில்லை. காரணத்தை தேடுபவன் வெற்றியை எட்டுவதேயில்லை இது பொன்மொழி. ஒவ்வொரு நொடி தாமதமும் ஒவ்வொரு கோடி ரூபாய் இழப்புக்குச் சமம் என்ற நடைமுறை வாசகமும் நமக்கு உணர்த்துவது எதுவெனில், ஒன்றே செய், நன்றே செய் அதுவும் இன்றே செய். நான் வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பவில்லை.

செல்வந்தனாக விரும்பவில்லை. அடுத்தவர் மதிக்கும் நபராக விரும்பவில்லை. என்று உலகில் எத்தனை வகை மனிதர் இருந்தாலும் ஒருவர் கூட நினைக்க மாட்டார். இந்த விசயத்தில் மட்டும் அனைவர் எண்ணமும் ஒன்றாக இருக்கும். அது வெற்றி என்ற ஒன்றுதான். நீங்கள் எந்த துறையை சேர்ந்தவராக இருந்தாலும், நீங்கள் எந்த துறையில் சாதிக்க வேண்டும் என்று விரும்பினாலும் உங்கள் மூளையில் சுறுசுறுப்பும் உங்களுடைய உடல் தகுதியும் மிகவும் முக்கியம். நம்முடைய உடல் எடை இருக்க வேண்டிய அளவை விட அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ அது நமது உடற் தகுதியை நேரடியாக பாதிக்கும்.
 




ஒவ்வொருவர் உடல் எடை அதிகரிக்கவும், குறையவும் அவர்களுடைய உணவு பழக்கமே முக்கிய காரணமாக அமைகிறது. கொழுப்புச் சத்தான உணவுகளை குறைத்துக் கொள்வது உடல் உடையை குறைப்பதற்கான எளிய வழியாகும். நாம் ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவிலுள்ள புரத சத்தின் (கலோரியின்) அளவும் நாம் தினசரி வேலையின் காரணமாக செலவிடும் கலோரியின் அளவும் (உதாரணமாக 31லிருந்து 35 கலோரி முழுக்கத் தேவை.) சமமாக இருக்க வேண்டும்

நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய கலோரியும், செலவிடக் கூடிய கலோரியும் அதில் உபரியாக இருக்கக்கூடிய கலோரியின் அளவே கொழுப்பு ஆகும். அதனை குறைப்பதற்கு நாம் அன்றாடம் உடற்பயிற்சியை கீழ்க்கண்டவாறு நீங்கள் தொடங்கலாம்.
1. நடைப் பயிற்சி
2. ஓட்டப்பயிற்சி
3. நீச்சல் பயிற்சி
4. சைக்கிளிங்

எந்த ஒரு உடற்பயிற்சியும் நீங்கள் மெதுவாகவும், சீராகவும் தொடங்க வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள பயிற்சிகள் ஏரோபிக் என்று அழைக்கப்படும். ஏரோபிக் என்றால் ஆக்சிஜன் ஏரோபிக் உடற்பயிற்சி என்பது எந்த வகையான உடற்பயிற்சிக்கு அதிகப்படியான ஆக்சிஜன் தேவையோ அதனை ஏரோபிக் உடற்பயிற்சி என்கிறோம் எனவே நமக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்க நமது உடற்பயிற்சியை அதிகப்படுத்துவதே சிறந்த வழியாகும். சீராகவும் முறையாகவும்., தொடங்கும் உடற்பயிற்சி உங்களுக்கு 3-ம் மாதம் முதல் 1 வருடத்திற்குள் முறையான பலனை கொடுக்கத் துவங்கும். விரைவான பலனுக்கு கொழுப்புச் சத்து குறைந்த உணவு பழக்க முறையும் (எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவு வகைகள்) முக்கிய அம்சம், வாரத்திற்கு 4 நாட்களாவது உங்கள் உடற்பயிற்சி நடைமுறையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். குறைந்த பட்சம் 10 நிமிடங்களாவது அன்றாடம் உடற்பயிற்சி செய்வது நிறைந்த பலனைத் தரும்.
 

இதிலிருந்து உங்கள் உடற்பயிற்சி நேரத்தை உயர்த்திக் கொள்வது நல்லது. உடற்பயிற்சிக்கு முன் உங்கள் மருத்துவரை ஆலோசிப்பது நலம். வெளியில் சென்று உடற்பயிற்சி செய்ய முடியாத நபர்கள் சிறந்த உடற்பயிற்சி சாதனங்களை தேர்ந்தெடுத்து தங்கள் இல்லத்திலேயே அமைத்து செய்வது, தங்களுக்கு மட்டுமல்லாமல் குடும்பத்தினர் அனைவரும் நிறைந்த பலன்களை தரும்.

உடற்பயிற்சியின் மூலம் கிடைக்கும் முக்கிய பயன்கள்

1. அதிகப்படியான கொழுப்புச் சத்து குறைந்து உடல் எடை சீராகும்
2. கவர்ச்சிகரமான உடல் தோற்றம் கிடைக்கும்
3. உங்களுடைய இருதயமும், நுரையிரலும் பலம் பெறும்
4. வயதின் காரணமாக வரக்கூடிய உடல் உபாதைகள் குறையும்
5. தோற்றப் பொலிவு கூடும்
6. உடல் பலம் கூடும்
7. தன்னம்பிக்கை அதிகரிக்கும்

எனவே மேற்குறிப்பிட்டுள்ள பலன்களை பெற நாம் இப்பொழுதே உடற்பயிற்சி திட்டத்தினை வகுப்பதோடு இல்லாமல், இப்போதே செயல்படுத்துவோம்.
 

உளமார உண்போம் வாருங்கள்!



மனச் சாளரத்தைத் திறப்பதில் நமது உணவுக்கும் பெறும் பங்கு உண்டு.
நம் உடலானது நாம் உண்ணும் உணவினால் ஆனது. உணவு என்பது நம் உடலுக்கு வலு சேர்ப்பது மட்டுமல்ல; நம் மனத்துக்கும் வளம் சேர்ப்பது. நாம் உட்கொள்ளும் உணவு நமது குணங்களையும், நமது மன நிலையையும் தீர்மானிக்கும்.

சில உணவுகள் நமக்கு அதீதத் தூக்கத்தையும், சோம்பேறித்தனத்தையும் கொடுக்கும். சில நம் மனநிலையை உயர்த்தும். என்ன உணவு சாப்பிடுகிறோம் என்பதுடன், எப்போது சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம்.

காலை உணவை தவிர்க்கக் கூடாது. ஒவ்வொரு வேளையும் பழங்களும், பச்சைக் காய்கறிகளும் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரவு உணவு மிகவும் கொஞ்சமாகவும் இலகுவாக செரிக்கும்படியும் இருக்கட்டும். இரவு மிகவும் நேரம் கழித்து உண்பது கூடாது.

தேடியந்திரத்தின் மூலம் எனது பதிவுகளுக்கு வருபவர்களில் அதிகப்படி-யானவர்கள் தேடுவது ‘உடனடியாக உடல் இளைக்க’, ‘ஸ்லிம் ஆவது எப்படி?’, இரண்டு மாதத்தில் உடல் பருமன் குறைய’  இவைகளைத்தான்!

தினசரி நாளிதழில் ஒரு செய்தி:

நமது தலைநகர் புது தில்லியில் பள்ளி செல்லும் சிறுவர்களில் மூன்று பேரில் ஒருவர் அளவுக்கு மீறிய உடற்பருமனுடன் இருக்கிறார்கள். இந்தக் குழந்தைகள் செல்வந்தர் வீட்டுக் குழந்தைகள் என்று நினைத்தால் தவறு. மத்திய தரக் குடும்பக் குழந்தைகளில் 10 க்கு ஒரு குழந்தை வயதிருக்கு மீறிய உடற்பருமனுடன் இருக்கின்றது. 
இவையெல்லாம் எதைக் குறிக்கின்றன? நமது ஒழுங்கீனமற்ற உணவு முறையைத்தான்.

இந்த நவீன யுகத்தில் உண்பது என்பதும் ஒரு வேலையாகிவிட்டது.
‘சீக்கிரம் சாப்பிடுங்கள்; எனக்கு வேலை ஆக வேண்டும்’ என்று ஒவ்வொரு இல்லத்தரசியும் சொல்லுகிறார்கள். கையில் தட்டைப் பிடித்துக்கொண்டு, நடந்துகொண்டு, அலைபேசியில் பேசிக்கொண்டு அல்லது பேப்பரில் ஒரு கண், தொலைக்காட்சியில் ஒரு கண் என்று  சாப்பிடுவது என்பது ஒரு செய்து தீர்க்கவேண்டிய கட்டாயக் கடமை என்ற நிலை வந்துவிட்டது.

தொலைக்காட்சி முன் அமர்ந்துகொண்டு தட்டில் என்ன போடுகிறார்கள் என்ற உணர்வே இல்லாமல் சாப்பிடுவது பழக்கமாகிவிட்டது.

தரையில் அமர்ந்துகொண்டு தலைவாழை இலைபோட்டு நிதானமாக ருசித்து ரசித்து சாப்பிடுவது என்பது போன தலைமுறையுடன் முடிந்து போன பழங்கதை ஆகிவிட்டது. அது போகட்டும்; உணவு மேசையிலாவது அமர்ந்து சாப்பிடுகிறார்களா என்றால் ஊஹும், அதுவுமில்லை. குடும்பத்துடன் சாப்பிடுவது என்பதும் மலையேறிவிட்டது.

காலையில் இல்லத்தரசிகளுக்கும், கணவன்மார்களுக்கும் அலுவலகம் போகும் அவசரம்; பிள்ளைகளுக்கு பள்ளிக்கும், கல்லூரிக்கும் கிளம்பும் அவசரம். உட்கார்ந்து சாப்பிட நேரமில்லை. மதிய உணவு நமது டிபன் பாக்ஸ் எவ்வளவு கொள்ளுமோ அவ்வளவு தான்! இரவாவது நிம்மதியாக, நிறுத்தி, நிதானமாக சாப்பிடுகிறோமா என்றால்  அந்தப் புண்ணியத்தையும் தொலைக்காட்சிப்பெட்டி இல்லையென்றாக்கி விடுகிறது.

இதன் விளைவு என்ன?

சிறிய வயதிலேயே அளவுக்கதிகமான உடற்பருமன், அதைத்தொடர்ந்து வரும் வரும் ‘சர்க்கரையை மற, உப்பைக் குறை’ என்ற நோய்கள்தான்.
நாம் தலைமுறை தலைமுறையாக சாப்பிட்டுவரும் உணவுகளை விடுத்து, அதிகக் கலோரிகளைக் கொண்டுள்ள உணவுகள், பாஸ்ட் புட் எனப்படும் குப்பை உணவுகள் சாப்பிடுவது நம் உடல் ஆரோக்கியத்தையும் குறைத்து மன நிலையையும் வெகுவாகப் பாதிக்கின்றன.

வீட்டு உணவு தான் எப்போதும் சிறந்தது. எப்போதாவது ஒரு சமயம் வெளியில் சாப்பிடலாம்; தவறில்லை.

இளமையில் உணவை மருந்துபோல் உண்டால், வயதான காலத்தில் மருந்துகளை உணவு போல் உண்ண வேண்டிய அவசியம் நேராது.

உணவை வீணாக்காமல் உண்ணுவோம்:
நாம் உண்ணும் ஒவ்வொரு கவளம் உணவின் பின்னும் பலரின் உழைப்பு இருக்கிறது. நம் வீட்டுப் பெண்களின் உழைப்பு மட்டுமல்ல. வெயில் மழை பாராது நிலத்தில் நெற்றி வியர்வை சிந்த உழைக்கும் விவசாயிகளிலிருந்து தொடங்கி நம் இலையில் – தட்டுகளில் – சமைத்த உணவாக விழும் வரை  எத்தனையெத்தனையோ பேர்கள் பாடுபடுகிறார்கள். நாம் வீணாக்கும் ஒவ்வொரு சிறு துளி உணவும் இவர்களின் உழைப்பை அலட்சியப்படுத்துவது போல, அல்லவா?

எத்தனையோ மக்கள் ஒரு நாளைக்கு ஒருவேளை உணவு கிடைக்காமல் பசியுடன் வாழ்க்கை நடத்தும்போது நாம் உணவை வீணடிப்பது நம்மைப் படைத்தவனை அவமானப் படுத்துவது போல!

கோவில் பிரசாதம் ரொம்ப ருசியாக இருக்கும். எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். ஏன் தெரியுமா? சமைக்கப் பட்டவுடன் கடவுளுக்குப் படைக்கப் படுவதுதான். உண்பதற்கு முன் ஓர் நிமிடம் கடவுளை த்யானித்து விட்டு உண்ணுவது அந்த உணவை பவித்திரமாக்கும்.

சமைக்கும் பெண்களுக்கு/ஆண்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்: சமைக்கும்போது மனதில் கோபங்கள், தீய எண்ணங்கள் வேண்டாம். நமது தீய சிந்தனைகள் சாப்பிடும் உணவை விஷமாக்கும். சமைக்கும்போது கடவுளுக்கு தோத்திரங்கள் சொல்லிக் கொண்டே சமைக்கலாம். இது உணவின் தோஷங்களை சமனம் செய்யும்.

சாப்பிடும்போது சண்டை சச்சரவுகள் வேண்டாம்.

சாப்பிடும்போது உணவில் மட்டுமே கவனம் செலுத்துவோம். 

அப்போதுதான் நாம் உண்ணும் உணவு அமிர்தமாக மாறி நம்மை நோய் நொடிகள் வராமல் காக்கும்.

நினைவிருக்கட்டும்: நாம் உண்ணும் உணவுதான் நம்மை உருவாக்கும் –உட்புறத்திலும், வெளிப்புறத்திலும்.

உளமார, வயிறார கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டே சாப்பிடுவோம். உண்ணும் உணவின் மூலம் உடல் நலத்தையும், மன நலத்தையும் பேணுவோம்.

தமிழ் வேதம்


ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண - ரஜதஸ்ரஜாம்
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ

விஷ்ணு பகவானே ! தங்க நிறம் உடையவளும், பாவத்தைப் போக்குகிறவளும், பொன் - வெள்ளி ஆபரணங்களைத் தரித்தவளும், எல்லா மக்களையும் சந்தோஷமாக வைத்திருப்பவளும், தங்க உருவமாகத் தோற்றமளிப்பவளும், எல்லாரும் ஆசைப்படுகிறவளுமான லக்ஷ்மி தேவியின் அருள் எனக்குக் கிட்டும்படி அருள வேண்டுகிறேன். - 
 ஸ்ரீ ஸுக்தம்
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே விஷ்ணு பத்ன்யை ச தீமஹி
தன்னோ லக்ஷ்மி ப்ரசோதயாத்

விஷ்ணு பத்தினியை தியானம் செய்கிறோம். இந்த உபாசனை செய்யக்கூடிய அறிவை அந்த லக்ஷ்மிதான் தூண்டிவிடவேண்டும். லக்ஷ்மி காயத்ரி ஸ்லோகமானது. அதிக விசேஷமானது. எங்கேயும், எப்போதும் சுத்தமாக, ஆச்சாரமாக இருந்து இதைச் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.)
திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள் 
மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா 
இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை
இருநிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்
செந்திறத்த தமிழோசை வடசொல் ஆகி
திசை நான்குமாய்த் திங்கள் ஞாயிறாகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா
அந்தணனை அந்தணர்மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாதென்றும்
வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சம்மே
 திருமங்கையாழ்வார் பாடிய திருநெடுந்தாண்டகத்தில் இருக்கும் பாசுரம். 
வடமொழி வேதங்கள் தன்னுடைய சொந்த முயற்சியால் பெருமாளைஅறிய முயற்சி செய்து மகரிஷிகளால் பாடப்பட்டது. அதனால இறைவனின் முழுப் பெருமையும் பாட முடியாமல் வேதங்கள் பின்வாங்கிவிட்டனவாம்..
அன்பென்னும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன் 
அதில் ஆசையென்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்
என் மனம் உருகிடவே பாடி வந்தேன் 
உன் ஏழு மலை ஏறி ஓடி வந்தேன்
 

ஆழ்வார்கள் பெருமாளாலேயே மயர்வற மதிநலம் அருளப்பெற்ற அருளாளர்கள். 
அதனால் பெருமாளை உள்ளது உள்ளபடி உணர்ந்து பாடல்கள் பாடியிருக்கிறார்கள்..
அவர்களின் இனிமையான தமிழ்ப் பாடல்களை கேட்டு இன்புற பெருமாள் பிரபந்தம் பாடுபவர்களைத் தொட்ர்கிறார்..

பெருமாளை இன்னும் முழுமையாக தெரிந்து கொள்ளமுடியாத வேதங்களை ஓதுகிறவர்கள் பெருமாளைத் தொடர்கிறார்கள்..
வடமொழி வேதங்களை விட ஆழ்வார் அருளிச்செயல் என்று சிறப்பு பெற்ற தமிழ் வேதங்களுக்கு மதிப்பு கூட. 
அறிவால் அளக்கமுடியாத ஆண்டவன் எளிய அருமையான அன்பான பக்திக்கு கட்டுப்பட்டு பின்தொடர்வது சிலிர்க்கவைக்கும்..
நினைப்பதை நடத்தி வைப்பாய் வைகுந்தா
மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா 
உரைத்தது கீதை என்ற தத்துவமே
அதை
 உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே

 வேதத்தை, அதன் சாரம் மாறாமல்,மாறன் நம்மாழ்வான், தமிழ்ப் படுத்தியதால் தான், "தமிழ் வேதம்" என்று இதை மட்டும் குறிப்பிட்டுச் சொன்னார் சித்தர் கருவூரார்!
CURRENCY ALANKARAM to LORD VENKATACHALAPATHY, SALEM.!!! GOVIDA, GOVINDA!!!
வகுளாபரணன் என்ற பெயர் பெற்ற நம்மாழ்வார் ஓதிய ஆயிரம் பாடல் கொண்ட திருவாய்மொழி. அது வேத நெறிகளின் சாராம்சம்!
மானுடம் உய்ய வந்த அதுவே தமிழ் வேதம்!
அதன் ஒரு சொல்லுக்கு ஈடாகுமோ, உலகில் உள்ள கவி?

அடங்கெழில் சம்பத்து அடங்கக்கண்டு ஈசன்
அடங்கெழி லஃதென்று--அடங்குக வுள்ளே..

அற்றது பற்றெனில் உற்றது வீடு, உயிர் அற்றிறை பற்றே!!!

ஈரடிகளில் ஈர்த்து விட்டதே! சகல வேத ஞானமும் சட்டென்று புரிந்து விட்டதே! அதுதான் தமிழ் வேதம்!

[6 x 8 two prints.jpg]
ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.
வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.
அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்பது ஐதீகம்

திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. 
ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கி இறையருள் நாடியவள்..

பீடுடைய - பெருமையுடைய மாதமான மார்கழியில்
பக்தியினால் தூய்மையாக்கி மேன்மை பெறுவோம்.
மாஸானாம் மார்க்கசீர்ஷ: - பகவத் கீதைஸ்ரீகிருஷ்ணர் மார்கழி மாதத்தின் சிறப்பைச் சொல்வதற்காக மாதங்களில் நான் மார்கழி என்கிறார்.
பாரம்பரியமான இந்திய காலக் கணக்கீட்டில், சூரியனின் பயணப் பாதையை ஒட்டி, உத்தராயணம் - தட்சிணாயணம் என இரு பிரிவுகள் உண்டு...
 வடக்கு மற்றும் தெற்கு நோக்கிய பயணத்தைக் குறிக்க இவ்வாறு பிரிவுகள்... 
 தட்சிணாயணத்தின் கடைசி மாதம் மார்கழி. 
உத்தராயண புண்ய காலம் தை மாதம் முதல் தொடங்குகிறது. 
உத்தராயணம் என்பது தேவர்களுக்கு பகல், தட்சிணாயணம் இரவு ..
. அவ்வகையில் மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியல் நேரம். 
எனவேதான், அந்த மாதத்தில் திருப்பள்ளியெழுச்சியுடன் ஆலய நடைமுறைகள் துவங்குகின்றன.
 
இருண்டு கிடக்கும் வாழ்க்கையில் விடியலைக் காண, விடியல் நேரமான மார்கழியில் இறைவனைத் துதித்து நோன்பினை கைக்கொள்ளும் பழக்கத்தை முன்னோர் ஏற்படுத்தி வைத்தனர். கண்ணனும் அதைத்தானே சொன்னான். "பக்தா உன் வாழ்க்கை விடியல் என்னில் துவங்குகிறது' என்று!
 அதனால்தான் ஆண்டாள் மார்கழி நோன்புக்கு கண்ணனையே உபாயமாகப் பிடித்தாள். மார்கழி நோன்பு வேறு, கண்ணனுக்கான நோன்பு வேறா என்ன? கண்ணனை அடைவதற்காகவே பாவை நோன்பைக் கைக்கொண்டாள் ஆண்டாள்.
 "வேதமனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்' என்று கொண்டாடப்படுகிறது ஆண்டாள் அருளிய திருப்பாவை. 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் சுப்ரபாத சேவைக்குப்பதிலாக திருப்பாவை பாடல்கள் பாடப்படுவது வழக்கமாக உள்ளது. 




Thirupathi

--
Kind Regards,
RajaRajeshwari Jaghamani

http://jaghamani.blogspot.com/

ஆன்மீகம் வெறும் அறிவியலா ?

                       





'ஆன்மீகம் வெறும் அறிவியலா ' என்ற இத்தலைப்பு
ஒரு சிலருக்குப் பட்டிமன்றத் தலைப்பு போன்றும்
ஒரு சிலருக்குக் கேள்வி போலும்
ஒரு சிலருக்கு ஒரு தீர்ப்பு போலும் தோன்றக் கூடும் ,
அவரவர் எண்ண ஓட்டத்திற்குத் தகுந்த படி.

என் எண்ண ஓட்டத்திற்குத் தக்கபடி , ஆம்  அது ஓர் தீர்ப்பே.
அது ஓர் அறிவியலே ! ,  ஏன் ? என நான் தீர்மானிக்கும் காரணங்களை
நான்  படித்த , பார்த்த , கேட்ட விஷயங்களை மற்றும் என் அனுமானங்களை
இங்கே உங்களிடம் நான் பகிர்ந்து கொள்ள  ஆசைப்படுகிறேன்.

இந்த இரண்டு வார்த்தைகளுமே எண்ணில் அடங்கா அர்த்தங்களையும்

கூறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ள சமுத்திரங்கள். ஆனால் ஆன்மீகத்தின் சாராம்சம்
'உயிர்களிடத்தில்  அன்பு ' & அறிவியலின் சாராம்சம் ' அந்த உயிர்களின் முன்னேற்றம்'  .
இரண்டுமே இறுதியில் மனிதர்களின் முன்னேற்றதிற்குத்  தான் பாடுபடுகின்றன.

இரண்டும் ஒன்றோடு  ஒன்று பின்னிப் பிணைந்து எப்படி அதுவாகவே

 ஆகி விடுகிறது என அறிவியல் நோக்கில் இனி பார்ப்போம். ஆனால்
இதில் மிகச் சரியான வேதியியல் பெயர்கள் , கோட்பாடுகள் என்று இருக்காது.
பொதுவான கருத்தை , ஏன் நம் முன்னோர்கள் சாஸ்திர , சம்பிரதாயங்களை
 ஏற்படுத்தி வைத்தார்கள் என்ற காரணங்களை சற்று  உற்று நோக்கி அறிந்து கொள்ள முற்படுவோம்.

1 .  முதலில் வார நாட்களை , எந்த எந்த கிரக ஆதிக்கம் அந்த நாளில் அதிகம் உள்ளதோ அதன் பெயரிலேயே

நாம் அதனை அழைப்பதே இது ஓர் அறிவியல் என்பதற்கு முதல் சான்று .

2 .  நம் உடலில் ஒவ்வொரு அணுவில் உள்ள DNA மூலக்கூறும் , ப்ரோடீன்களால் ஆன அதன்

குரோமோசோம்களும் இரு நாகங்களும் பின்னிப் பிணைந்தது போல்   இருக்கும் அதன் படம்
நமக்கு ராஹு கேதுக்களின் வடிவத்தையும் வழிப்பாட்டையும் மறைமுகமாக உணர்த்திப் போகின்றன.
தற்போது உலகெங்கிலும் DNA டெஸ்ட் செய்து கொள்வது என்பது ஒரு பெருமைக்குரிய மரபாக ஆகி வருகிறது என்று ஒரு நாளிதழ் சமீபத்தில் செய்தி வெளியிட்டு இருந்தது.

3 . ஜோதிடத்திலே நவக்ரகங்களுக்கு  உரிய தான்யம் , சமித்து , ரத்தினங்கள் போன்றவைக் குறிக்கப் பட்டுள்ளன.

இதில் புதனுக்குரிய பச்சைபயிறும் , குருவுக்கு உரிய கொண்டைக்கடலையும் , சுக்ரனுக்குரிய மொச்சையும்
DNA விற்குத் தேவையான ப்ரோடீன்கள் கொண்டவை என்பதானால் அதனை நம் முன்னோர்கள் ஆருடம் மூலம் கணித்து குறைவாக இருந்தால் அதை சுண்டலாக செய்தும் , அதிகமாக இருந்தால் பிறருக்குத் தானமும் செய்ய அறிவுறுத்துகின்றனர் கோவில் வழிபாடு மூலமாக.

4. தற்காலத்தில் ஜாதகப்  பொருத்தமுடன்  ரத்தப்பொருத்தமும் பார்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

நம் ஜாதகத்தில் உள்ள 'செவ்வாய்'  நம் ரத்தத்திலுள்ள 'RH '  பண்பை குறிக்கின்றது என்பது நாம் அனைவரும் அறிந்த அறிவியல் உண்மையே.

5 . சூர்ய நமஸ்காரம் செய்வது நமக்கு சூரியனில் இருந்து மட்டுமே கிடைக்கக்கூடிய , கால்ஷியம் சத்திற்கு மிக தேவையான வைட்டமின் 'D ' கிடைப்பதற்காகதான்.


6 . மார்கழி மாத அதிகாலைத் துயில் எழுதல் , கோலமிடுதல் நாம் அந்த மாதத்தில் அதிகமாகக் கிடைக்கக்கூடிய

ஒசான் காற்றை சுவாசித்து ஆரோக்கியத்தைப்  பெருக்கத்தான். எனவே ஸ்ரீ கிருஷ்ணர்  மாதங்களில் மார்கழியாக உள்ளார்.

வடகிழக்கு – வதந்தி – தொழில் நுட்பம் – அரசு?


மும்பை, பூனா, ஹைதராபாத், பெங்களூர், சென்னை என தென்னிந்தியாவின் மெட்ரோ நகரங்கள் அனைத்திலிருந்தும் வடகிழக்கு மக்கள் ஆயிரக்கணக்கில் தாயகத்திற்கு திரும்புகிறார்கள்.



செய்தி-01

வடகிழக்கு-மக்கள்
படம் நன்றி www.thehindu.com
மும்பை, பூனா, ஹைதராபாத், பெங்களூர், சென்னை என தென்னிந்தியாவின் மெட்ரோ நகரங்கள் அனைத்திலிருந்தும் வடகிழக்கு மக்கள் ஆயிரக்கணக்கில் தாயகத்திற்கு திரும்புகிறார்கள். அசாமில் போடோ இன மக்களுக்கும், இசுலாமிய மக்களுக்கும் இடையே நடைபெற்ற கலவரம் இதன் துவக்கப் புள்ளி என்றாலும் தற்போதைய கோலத்திற்கும் அலங்கோலத்திற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. அந்தக் கலவரம் குறித்து வினவில் தனிச்சிறப்பான கட்டுரை வருமென்பதால் தற்போது நடைபெறும் இடப்பெயர்ச்சி குறித்து மட்டும் இங்கு பார்க்கலாம்.
வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக அசாமில் குடியேறியிருக்கும் இசுலாமிய மக்கள்தான் கலவரத்திற்கு காரணமென்றும், அந்தக் கலவரத்தை வைத்து ஏனைய இந்தியாவில் இருக்கும் இசுலாமிய தீவிரவாத அமைப்புகள் மற்றும் பாகிஸ்தான் உருவாக்கியிருக்கும் வடகிழக்கு மக்கள் குறித்த வெறுப்புணர்வே தென்னிந்தியாவில் நடைபெறும் இடப்பெயர்ச்சிக்கு அடிப்படை என்று பா.ஜ.க வழக்கம் போல இந்து பாசிசத்தை உமிழ்கிறது.
இதற்கு தோதாக மத்திய அரசும், மியன்மார் கலவரம், அசாம் கலவரம் இரண்டிலும் இசுலாமிய மக்கள் பாதிக்கப்பட்டதாக சம்பந்தமே இல்லாத புகைப்படங்களை பாகிஸ்தான் இணைய தளங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பி ஒரு பயபீதியை உருவாக்கியிருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறது. இசுலாமியர்களால் தாக்கப்படுவோம் என்று பீதியின் காரணமாகவே வடகிழக்கு மக்கள் சொந்த ஊர் திரும்புவதாக இதைப் புரிந்து கொள்ளலாம்.
ஆனால் உண்மை என்ன? இந்தியாவில் இசுலாமிய மக்கள் யாரையும் தாக்கும் நிலையில் நாடெங்கிலும் இல்லை. அவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் வெகு சில இடங்களில் மட்டும்தான் அது சாத்தியம். இந்தியா முழுக்க பெரும்பான்மையாக வாழ்வது ‘இந்துக்கள்’தான் என்பதால் இந்துத்தவத்தின் தாக்குதலிலும், கண்காணிப்பிலும்தான் முசுலீம்கள் வாழ வேண்டியிருக்கிறது என்பதை குஜராத், மும்பை மற்றும் வட மாநில கலவரங்கள் பல, வாழும் வரலாறாக யதார்த்தத்தை எடுத்துரைக்கின்றது. ஹைதராபாத்தில் ஒரு தன்னார்வ நிறுவனம் இந்தியா – பாக் நட்புறவிற்காக நடத்திய கூட்டம் ஒன்றை பாக் சுதந்திர தினத்தை கொண்டாடும் முசுலீம்கள் என்று விசுவ இந்து பரிஷத் பரப்பியிருக்கும் அவதூறு தற்போது அம்பலத்திற்கு வந்திருப்பது ஒரு சான்று.
செல்பேசி, இணையம் போன்ற தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிதான் பாகிஸ்தானின் வதந்தியை வடகிழக்கு மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது என்று சிலர் கூறுகின்றனர். பாகிஸ்தான் இந்த சதியை செய்வதாகவே வைத்துக் கொள்வோம். ஆனால் அந்த வதந்தியை இந்த மக்கள் ஏன் நம்ப வேண்டும்? என்ன பிரச்சினை வந்தாலும் தாம் பணியாற்றும் இடங்களில் மத்திய, மாநில அரசுகள் தம்மைப் பாதுக்காக்கும் என்று அந்த மக்களுக்கு ஏன் தோன்றவில்லை? மந்திரிகள் பலர் ரயில் நிலையங்களுக்கு வந்து வாக்குறுதி கொடுத்தும் ஏன் பலனில்லை?
இது அந்த மக்களின் சொந்த மண் அனுபவத்திலேயே தெரிந்த ஒன்று. இராணுவ சட்டங்களைவைத்து வடகிழக்கு மாநிலங்களில் இந்திய அரசு நடத்தியிருக்கும் அட்டூழியங்களை அந்த மக்கள் அறிவார்கள். பிறந்த ஊரிலேயே இதுதான் கதியென்றால், பிழைக்க வந்த ஊரில் மட்டும் அந்த அரசு மாறிவிடாது என்று அவர்களுக்குத் தெரியும்.  அரசு மட்டுமல்ல, ஊடகங்கள், நீதிமன்றங்கள், போலீசு அனைத்தும் பாதுகாப்பானதில்லை என்பதை காஷ்மீர் முசுலீம்கள் முதல் இராமேஸ்வரம் மீனவர்கள் வரை நன்கு அறிவார்கள்.
ஆகவே இந்த வதந்திக்கு பாகிஸ்தானையும், இணைய தளங்களையும் மட்டும் குறை கூறுவதில் பலனில்லை. யார் நெருப்பு வைத்தார்கள் என்பது பிரச்சினை அல்ல, சிறு தீப்பொறி பட்டாலும் பற்றி எரியும் வண்ணம் சமூக நிலமை சருகுககளாக காய்ந்திருப்பதுதான் பிரச்சினை. அடுத்து இந்த தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தரத்தைப் பார்ப்போம்.
அசாமில் போடோ இன மக்களுக்கும், இசுலாமிய மக்களுக்கும் இடையே நடக்கின்ற பிரச்சினைக்காக சம்பந்தமே இல்லாத வேற்று இன மக்கள் ஏன் வெளியேற வேண்டும்? அசாம், மணிப்பூரி, போடோ, குக்கி, நாகா, மிசோரம், திரிபுரா மற்றும் பல்வேறு பழங்குடி இனமக்களைக் கொண்ட இந்த பிராந்தியம் இந்திய மக்களிடம் வெறுமனே வடகிழக்கு என்பதாகத்தான் ஊடகங்கள் மற்றும் இந்திய அரசால் இந்திய மக்களிடம் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
வரலாற்று ரீதியாக இந்தியாவுடன் வேறுபட்டு இருக்கும் இப்பிராந்திய மக்களை வன்முறையால் மட்டுமே கட்டி வைத்திருக்கிறது இந்திய அரசு. ஆக பெரிதாக பீற்றப்படும் தகவல் தொழில் நுட்ப புரட்சி ஒரு பிராந்திய இன மக்களை புரிந்து கொள்வதற்கு கூட பயன்படவில்லை. சினிமா நட்சந்திரங்கள் உண்டு கழித்திருக்கும் வரலாற்று முக்கியத்தவும் வாய்ந்த செய்திகளின் ஆக்கிரமிப்போடு ஒப்பிடும் போது வடகிழக்கிற்கான இட ஒதுக்கீடு மிகவும் சொற்பம்.
இந்தியா முழுவதும் தேவைப்படும் மலிவான உழைப்புச் சந்தையை வடகிழக்கு அளிக்கிறது என்பதைத் தாண்டி இம்மக்கள் குறித்து முதலாளிகளுக்கோ, இந்திய அரசுக்கோ அக்கறை ஏதுமில்லை.

விவசாயத்தை காப்போம்-ஜீரோ பட்ஜெட் விவசாயம்


அன்பர்களுக்கு வணக்கம்,நம் நாட்டின் முதுகெலும்பு கிராமம் தான், அதில் இருக்கும் நிலங்களை பிளாட் போட்டு விற்று விட்டு நாம் என்ன செவ்வாய் கிரகத்திற்கு சென்றா வாழப் போகிறோம்? நாம் இங்கு வாழ உணவு அவசியம், அதை தயாரிக்க விவசாயம் அவசியம், அது தற்போது அழிந்து கொண்டிருக்கிறது, அதை காக்க வேண்டியது நமது கடமை, வெறுமனே புதிதாய் ஆன்ட்ராய்ட் மொபைல் கண்டு பிடித்து அதனை சாப்பிட்டு நம்மால் உயிர் வாழ முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். சரி விசயத்திற்கு வருவோம். 
நம் நாட்டில் விவசாயம் அழிய முக்கிய காரணம் நஸ்டம், அதற்கு காரணம் செலவு அதிகமானது தான், அது அதிகரிக்க காரணம், ரசாயன முறையிலான விவசாயம், அது நமது முறையல்ல. இரண்டாம் உலகப் போரின் போது மீதமான வெடி மருந்தினை உரம் என்ற பெயரில் நம்மிடம் ஏமாற்றி தள்ளி விட்டார்கள். அதை மாற்றியாக வேண்டும்.
ரசாயன விவசாயத்தினால் வரும் கேடுகளை எதிர் கொள்ள இயற்கை விவசாயம் ஒரு பதிலாக சொல்ல படுகிறது. ஆனால் மராத்தியத்தில் இருந்து வரும் திரு சுபாஷ் பலேகர் சுலபமான ஒரு பதிலை வைத்து இருக்கிறார். இதற்கு ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்று பெயர்.
விவசாயத்தையும் மாடு வளர்ப்பையும் சேர்த்து அவர் இந்த தொழிற் நுட்பத்தை கண்டு பிடித்து உள்ளார்.
அவர் கூறுகிறார் “விவசாயத்திற்கு இடு பொருள் விலைகள் (உரங்கள், பூச்சி கொல்லிகள்) ஏறி கொண்டே போகின்றன. ஜீரோ பட்ஜெட் முறையில் ஒரு விவசாயி வெளியில் இருந்து ஒரு இடு பொருளும் வாங்க வேண்டியதில்லை. ஒரு விவசாயி, ஒரு நாடு பசுவை வைத்து கொண்டு முப்பது ஏகர் விவசாயம் செய்ய முடியும், ஒரு விதமான இடு பொருளும் வாங்காமல். கோமூத்திரம், சாணி, போன்றவையே போதும்”
இது எப்படி முடிகிறது?
அவர் கூறுகிறார்  ” பயிர்கள் மண்ணில் போடும் உரங்களில் இருந்து 2% மட்டுமே எடுத்து கொள்ளுகிறது. மற்ற 98% பங்கும் காற்று, நீர், மற்றும் சூரிய வெளிச்சம் இருந்து எடுத்து கொள்ளுகிறது. இந்த மற்றதை செய்வது மண்ணில் உள்ள நுண் யிர்கள் தான். ஆனால் இவை ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகளால் கொல்ல படுகின்றன.
இயற்கையாக, மண்ணில் நுண் இயிரிகளை மீண்டும் கொண்டு வர, பசு சாணம் போதும். ஒரு கிராம் பசும் சாணம் ஐநூறு கோடி நுண் உயிரிகள் இருக்கின்றன. மண்ணின் நலத்தை உயர்த்த, அவர் ஆறு ஆண்டுகள் பல விதமான ஆராய்சிகளை செய்து உள்ளார். வெல்லம, சுண்ணாம்பு போன்றவையும் அவர் பயன் படுத்துகிறார். நாட்டு பசு தான் சரியாக வரும்” என்கிறார் அவர்.
வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்ய பட்ட Eisenia foetida என்ற மண் புழு பற்றியும் அவர் குறை கூறுகிறார். இந்த மண் புழுக்கள் மண்ணில் உள்ள நுண் உயிரிகளை உண்டு விடுவதால், பயிர்கள் பாதிக்க படுகின்றன என்கிறார் அவர்.
இந்த ஜீரோ பட்ஜெட் முறையினை பயன்படுத்தி பல விவசாயிகள் நம் மாநிலத்திலேயே பயனடைந்திருக்கிறார்கள். அவர்களை பற்றியும் பார்ப்போம். ரசாயண முறையினால் அதீத செலவும், மண்வளம் பாதிக்க படுதலுமே மீதி. உதாரணத்திற்கு டீலக்ஸ் பொன்னி சாகுபடி பற்றிய பார்வையில் ஜீரோ பட்ஜெட் விவசாயத்திற்கும் பூச்சிக் கொல்லி விவசாயத்திற்கும் இடையே உள்ள வித்தியாசங்களை பாருங்கள்.
இது போல் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தினை பற்றிய பல தகவல்கள் இருக்கின்றன, ஒவ்வொரு பதிவாக வெளியிடுகிறேன், படிக்கும் நண்பர்கள் தயவு செய்து அருகில் விவசாயத்தை தவிர்த்து வேறேதும் அறியா நண்பர்களுக்கு எடுத்து சொல்லுங்கள். எனது அடுத்த பதிவு
விவசாயம் இல்லையேல் நம் நாட்டின் நிலைமை? சிந்தியுங்கள்.