TANJAI PRAGATHESWARA TEMPLE VISIT :
அண்மையில் முதன் முதலில் தஞ்சாவூர் பெரிய கோவில் என அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை தரிசிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. தஞ்சை பெரிய கோவிலை பார்த்தவுடன் இவ்வளவு நாளாக இப்படி ஓர் அழகான திருக்கோவிலை தரிசிக்காமல் ,பார்க்காமல் விட்டு விட்டோமே என வருந்தும் அளவுக்கு கட்டிடக்கலேயில் ,சிற்பங்கள் ,திருக்கோவில் விமானம் என மன்னர் முதலாம் இராசராசனால் சிற்பக்கலையில் சாதனை செய்துள்ளார் என்றே கூறவேண்டும் .
தமிழ்நாட்டில் இப்படி அழகான ஸ்தலத்தை உருவாக்கி 1000 ஆண்டுகளாகியும் அதன் தன்மை கெடாமல் அப்படியே இருப்பது ஆச்சர்யமே. திருக்கோவில் வெளிப்பிரகாரத்தில் இருந்து கிளம்பினால் முதலில் நாம் காண்பது மராட்டா நுழைவாயில் அது சிறிய கோபுரமே ஆனாலும் சிற்பங்கள் அழகானது.
அதன் பின்பு கேரளாந்தகன் திருவாசல் கோபுரம் அதை பார்த்து விட்டு அடுத்து நாம் சந்திப்பது இராசராசன் திருவாசல் அதையும் கடந்து சென்றால் நந்திமண்டபம் தமிழகத்தின் மிகப்பெரிய நந்தி இதுதானோ என வியக்குமளவுக்கு மிகப்பெரிய நந்தி ஒன்றை ஒரே கருங்கல்லால் அழகாக செதுக்கி இருப்பது வியப்பான ஒன்று. நந்தீஷ்வரரை சுற்றி வந்து வணங்க பெரிய சுற்றுப்பாதையும் உள்ளது.
அதன் பின் அழகிய கொடிமரம் வணங்கி வராஹி சன்னதியை தொழுத்து மூலவர் சன்னிதானத்தை அடையலாம் . மிகப்பெரிய லிங்கம் திருக்கோவில் பிரமாண்டத்திற்கு ஏற்றார் போல அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் லிங்க வடிவில் அழகாக அமைத்திருப்பது சிறப்பான ஒன்றாகும் .
பல கோடி பேர் வந்து வணங்கிய சிவஸ்தலம் .சிவபெருமானை வணங்கி விட்டு வெளியே வந்தால் தட்சிணாமூர்த்தி சன்னதி ,விநாயகர் சன்னதி, நவகிரகங்கள் லிங்க வடிவில் சன்னதி,பிரகதீஷ்வரர் திருக்கோவில் பின்புறம் வேம்புடன் இணைந்த கருவூரார் சன்னதி அருள்மிகு சுப்பிரமணியர் சன்னதி,சண்டிகேஷ்வரர் சன்னதி ,அம்பாள் சன்னதி என பார்க்க பார்க்க மலைப்பாகவும் வியப்பாகவும் இருக்கும் அற்புத திருக்கோவிலாகும் .
தஞ்சை பெரிய கோவில் தொடங்கப்பட்ட காலமும் விளக்கமும் :
முதலாம் இராச இராசனால் கி.பி 1003 ல் துவங்கப்பட்டு 7 வருடங்கள் திருப்பணிகள் செய்து பல ஊர்களில் இருந்தும் சலவைக்கருங்கற்கள் கொண்டு வந்து கி.பி 1010 ஆண்டு திருப்பணி நிறைவு பெற்றதாக வரலாறு. தஞ்சைப்பெரிய கோவிலின் லிங்கம் 3.66 அடி உயர லிங்கமாகும் .
எட்டு துண்டுகளான 81.284 டன் எடையுள்ள சிகரத்தை கொண்டதாக அமைந்துள்ளது. திருக்கோவில் விமானம் 60.96 மீட்டர் உயரமுடையதாகும் . திருக்கோவில் சிற்பங்களில் விநாயகர் ,சீதேவி,பூதேவி உடன் திருமால் ,துவாரபாலகர்கள் ,பிட்சாடனார் ,வீரபத்திரர் நடராஜர் ,ஹரிஹரர் ,சந்திர ஆகிய சிலைகளும் , 81 வகையான சிவனின் பல்வேறு நடனங்கள் அழகாக இடம் பெற்றுள்ளன.
கி.பி 985ல் ராஜராஜீஷ்வரம் பெருவுடையார் கோவில் உருவாக முயற்சி தொடங்க அடிகோலப்பட்டு பின்பு முதலாம் ராசராசனால் கி.பி 1003 ல் முழு முயற்சியை துவங்கி கி.பி 1010ல் முடிக்கப்பட்டதாக வரலாறு.
நாம் எழுதிய இந்த ஸ்தல வரலாறு என்பது யானைக்கு எறும்பு கொண்டு சென்று உணவிட்டதைப்போல சிறிய முயற்சியே .தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் திருக்கோவில் மிகப்பெரிய ஆய்ந்து கற்றுத்தெளிய வேண்டிய அற்புதம் .ஏனெனில் ஒவ்வொரு பிரகாரத்திற்கும் ,சன்னதிக்கும் தனித்தனி புராணக் கதைகளுண்டு. திருக்கோவில் நீளமும் அகலமும் பிரமிக்க வைக்கும் ஒன்றாகும் .
கண்டிப்பாக வாழ்நாளில் தரிசிக்க வேண்டிய சிவாலயமாகும் . வெளிநாட்டுப் பயணிகள் வந்து ஆர்வமுடன் பார்க்குமிடமாக தஞ்சைப்பெரிய கோவில் உள்ளது. திருக்கோவில் பற்றி எழுத நிறைய விஷயங்கள் உள்ளது.
நம்மால் முடிந்தவற்றை எழுதாயுள்ளோம் .எல்லாம் எழுதினால் பக்ககளால் நம் வலைப்பூ நிரம்பி விடும் . நேரில் வந்து பார்த்து ,
ரசித்து விட்டு எழுதுங்கள்
நட்புன் குரு.பழ மாதேசு
No comments:
Post a Comment