அன்பர்களுக்கு வணக்கம்,நம் நாட்டின் முதுகெலும்பு கிராமம் தான், அதில் இருக்கும் நிலங்களை பிளாட்
போட்டு விற்று விட்டு நாம் என்ன செவ்வாய் கிரகத்திற்கு சென்றா வாழப்
போகிறோம்? நாம் இங்கு வாழ உணவு அவசியம், அதை தயாரிக்க விவசாயம் அவசியம்,
அது தற்போது அழிந்து கொண்டிருக்கிறது, அதை காக்க வேண்டியது நமது கடமை,
வெறுமனே புதிதாய் ஆன்ட்ராய்ட் மொபைல் கண்டு பிடித்து அதனை சாப்பிட்டு
நம்மால் உயிர் வாழ முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். சரி விசயத்திற்கு
வருவோம்.
நம் நாட்டில் விவசாயம் அழிய முக்கிய காரணம் நஸ்டம், அதற்கு காரணம் செலவு
அதிகமானது தான், அது அதிகரிக்க காரணம், ரசாயன முறையிலான விவசாயம், அது நமது
முறையல்ல. இரண்டாம் உலகப் போரின் போது மீதமான வெடி மருந்தினை உரம் என்ற
பெயரில் நம்மிடம் ஏமாற்றி தள்ளி விட்டார்கள். அதை மாற்றியாக வேண்டும்.
ரசாயன விவசாயத்தினால் வரும் கேடுகளை எதிர் கொள்ள இயற்கை விவசாயம் ஒரு
பதிலாக சொல்ல படுகிறது. ஆனால் மராத்தியத்தில் இருந்து வரும் திரு சுபாஷ்
பலேகர் சுலபமான ஒரு பதிலை வைத்து இருக்கிறார். இதற்கு ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்று பெயர்.
விவசாயத்தையும் மாடு வளர்ப்பையும் சேர்த்து அவர் இந்த தொழிற் நுட்பத்தை கண்டு பிடித்து உள்ளார்.
அவர் கூறுகிறார் “விவசாயத்திற்கு இடு பொருள் விலைகள் (உரங்கள், பூச்சி
கொல்லிகள்) ஏறி கொண்டே போகின்றன. ஜீரோ பட்ஜெட் முறையில் ஒரு விவசாயி
வெளியில் இருந்து ஒரு இடு பொருளும் வாங்க வேண்டியதில்லை. ஒரு விவசாயி, ஒரு
நாடு பசுவை வைத்து கொண்டு முப்பது ஏகர் விவசாயம் செய்ய முடியும், ஒரு
விதமான இடு பொருளும் வாங்காமல். கோமூத்திரம், சாணி, போன்றவையே போதும்”
இது எப்படி முடிகிறது?
அவர் கூறுகிறார் ” பயிர்கள் மண்ணில் போடும் உரங்களில் இருந்து 2%
மட்டுமே எடுத்து கொள்ளுகிறது. மற்ற 98% பங்கும் காற்று, நீர், மற்றும்
சூரிய வெளிச்சம் இருந்து எடுத்து கொள்ளுகிறது. இந்த மற்றதை செய்வது
மண்ணில் உள்ள நுண் யிர்கள் தான். ஆனால் இவை ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி
கொல்லிகளால் கொல்ல படுகின்றன.
இயற்கையாக, மண்ணில் நுண் இயிரிகளை மீண்டும் கொண்டு வர, பசு சாணம் போதும். ஒரு கிராம் பசும் சாணம் ஐநூறு கோடி நுண் உயிரிகள்
இருக்கின்றன. மண்ணின் நலத்தை உயர்த்த, அவர் ஆறு ஆண்டுகள் பல விதமான
ஆராய்சிகளை செய்து உள்ளார். வெல்லம, சுண்ணாம்பு போன்றவையும் அவர் பயன்
படுத்துகிறார். நாட்டு பசு தான் சரியாக வரும்” என்கிறார் அவர்.
வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்ய பட்ட Eisenia foetida என்ற மண்
புழு பற்றியும் அவர் குறை கூறுகிறார். இந்த மண் புழுக்கள் மண்ணில் உள்ள
நுண் உயிரிகளை உண்டு விடுவதால், பயிர்கள் பாதிக்க படுகின்றன என்கிறார்
அவர்.
இந்த ஜீரோ பட்ஜெட் முறையினை பயன்படுத்தி பல விவசாயிகள் நம் மாநிலத்திலேயே
பயனடைந்திருக்கிறார்கள். அவர்களை பற்றியும் பார்ப்போம். ரசாயண முறையினால்
அதீத செலவும், மண்வளம் பாதிக்க படுதலுமே மீதி. உதாரணத்திற்கு டீலக்ஸ்
பொன்னி சாகுபடி பற்றிய பார்வையில் ஜீரோ பட்ஜெட் விவசாயத்திற்கும் பூச்சிக்
கொல்லி விவசாயத்திற்கும் இடையே உள்ள வித்தியாசங்களை பாருங்கள்.
இது போல் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தினை பற்றிய பல தகவல்கள் இருக்கின்றன,
ஒவ்வொரு பதிவாக வெளியிடுகிறேன், படிக்கும் நண்பர்கள் தயவு செய்து அருகில்
விவசாயத்தை தவிர்த்து வேறேதும் அறியா நண்பர்களுக்கு எடுத்து சொல்லுங்கள்.
எனது அடுத்த பதிவு
விவசாயம் இல்லையேல் நம் நாட்டின் நிலைமை? சிந்தியுங்கள்.
அன்புடன்: மழைச்சாரல் கதிரவன்
No comments:
Post a Comment